Thursday, April 21, 2011

ஞானம்

கண் எதிரே
சமபல எதிரணியுடன்
தன்படை தோற்று
கோப்பையை இழந்து
கதிகலங்கி நிற்கும்போது
புத்தியில் தோன்றியிருக்குமோ
ஆதரவற்ற அப்பாவிகளை
கொன்று குவித்தது
வெற்றியே அல்ல
ஈனச்செயல் என்று.