Tuesday, August 23, 2011

அன்னா ஹசாரே

அனுமதி மறுத்தால் ஓடிவிட
ஜாதிக்கட்சி தலைவன்
என நினைத்தீரா ?

சிறையை பார்த்து
ஓடி பதுங்கும் சிறுபிள்ளை
என நினைத்தீரா ?

சிறைக்கு செல்வதை விளம்பரப்படுத்தும்
தரம்கெட்ட அரசியல்வாதி
என நினைத்தீரா ?

மத்திய அரசின் பூச்சாண்டி வேலையை
பார்த்து பயப்படும் மாநில அரசு
என நினைத்தீரா ?

திருடன் கையில் கொடுத்த சாவி போல்
அரசியல்வாதியின் கையில் கொடுத்த
லோக்பால் சட்டம்

கூர் மழுங்கும் என எதிர்பார்த்ததை விட
ஒருபடி மேலே போய்
தவறான ஊழல் புகாருக்கு
இரண்டு வருடம் சிறை தண்டனையாம்

கேட்ட மக்களுக்கே ரத்தம் கொதிக்கும் போது
வழிநடத்தும் தலைவர் வேடிக்கையா பார்ப்பார்

ஊழல் பெருச்சாளிகள் மிதக்கும் சாக்கடையில் (திகார் சிறை)
சற்றும் தளராமல் ஆரம்பித்த உண்ணாவிரதம்

முதல் இரு நாட்கள்
மக்களை திசைதிருப்ப
சில அமைச்சர்களின் ஊழல் (காமெடி) புகார்கள்
பகையாளியை பங்காளியாக்க
ஒரு சிறு முயற்சி

மக்கள் கூட்டம் பார்த்து மிரண்டு
வாய் மூடி நிற்பதை தவிர
வேறு வழி உண்டா ?

இதை விட்டால்
மீண்டும்
ஒரு சந்தர்ப்பம் வாய்க்காது.

மீண்டும் இந்தியா சுதந்திரம்
அடைய வேண்டும்
கொள்ளைகாரர்களிடம் இருந்து