Thursday, December 8, 2011

உலகம்

உலகத்தை ஆட்டுவிப்பது
பணம் என்கிறான் வியாபாரி
பதவி என்கிறான் அரசியல்வாதி
அன்பு என்கிறான் நேசன்
கடவுள் என்கிறான் பக்தன்
விதி என்கிறான் சித்தன்
ஒன்று மட்டும் தெளிவாகிறது
ஆட்டுவிப்பது எதுவானாலும்
ஆடுபொருள் மனிதன் தான்.

No comments:

Post a Comment